Posts

Showing posts from June, 2020

ஜமாபந்தி என்றால் என்ன?எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும்.  இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்கள் மற்றும் தங்கள் கிராம குறைகளை தீர்க்க மனு தரலாம் ஜமாபந்தியில் எதற்காக மனு அளிக்கலாம்?  பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம்.  குடிநீர் வசதி, சாலை வசதி,  மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.  இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.  வீட்டு மனை உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.  குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், என்று உங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால

வாகன insurance எது சிறந்தது

Image
நாம்  இன்று எதற்காக இன்சூரன்ஸ் செய்கிறோமோ இல்லையோ? நமது ஹெல்த்துக்காக கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்தே ஆக வேண்டும். ஆனால் இதற்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் பெறுவது இரு சக்கர வாகன காப்பீடு தான். ஒரு வேளை துரதிஷ்டவசமாக உங்களது வாகனம் விபத்திலோ அல்லது திருடப்பட்டாலோ, வேறு ஏதேனும் காரணத்தினால் சேதமானலோ அவற்றை உங்களால் சரி செய்ய முடியும் என்றால் அது இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் பாலிசியினாலேயே முடியும். பொதுவாக இருசக்கர வாகன இன்சூரன்ஸ் இரு வகைப்படும். ஒன்று விரிவான காப்பீடு, இரண்டாவது மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு. விரிவான காப்பீடு இந்த விரிவான காப்பீடுகள் ஒரு விரிவான பாதுக்காப்புடன் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தின் சேதங்கள், ரைடருக்கான தனி நபர் விபத்து காப்பீடு மற்றும் காப்பீடு செய்யப்பட்ட வாகனம் மூலம் ஏற்பட்ட மூன்றாம் தரப்பினரின் இழப்பு ஆகியவற்றையும் இது கவர் செய்கிறது. இவ்வாறு காப்பீடு செய்யப்பட்ட வாகனம் தீ விபத்து வெடிப்பு, திருட்டு, விபத்து, இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் இப்படி பலவற்றையும் கவர் செய்கிறது. மூன்றாம் த

Tamilnadu EB region number

Image
உங்கள் வீட்டு கரெண்ட் பில் ஆன்லைன் ல பாக்கணுமா இந்த லிங்க் கிளிக் பண்ணி region number note பண்ணிகுங்க                            ⇣👇 👇 https://drive.google.com/file/d/10OcTEy8M7b7b0HQhQumAZcQat3J393_-/view?usp=drivesdk

நுரையீரல் கிருமியை முற்றிலும் நீக்க கசாயம்

Image
மூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில் ஏற்பட்ட கரகரப்பு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகின்றது. இரவில் உறங்கும் முன்பு குடித்து வந்தால் முக்கடைப்பு பிரச்சனை சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உங்களுக்கு நோய் தொற்று ஏற்படும். இதன் காரணமாக இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக்கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். இதை சரிசெய்ய இந்த மூலிகை கஷாயத்தை செய்து குடிக்கலாம், இது உடலுக்கு ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தந்து, நோய்களை குணமாக்க உதவுகிறது. அக்காலத்தில் ஆரோக்கியாமாக இருக்க நம் முன்னோர்கள் மூலிகையில் கசாயம் செய்து குடித்து வந்தனர். அப்படியான மூலிகைகளை வைத்து கசாயம் செய்வது எப்படி என்பதை இதில் காண்போம். நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் அது உங்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. கஷாயத்திற்கு தேவையான பொருட்கள். வெற்றிலை 1 மிளகு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் இஞ்சி சிறிதளவு வேப்பிலை தளிர் சிறிதளவு துளசி 8 இலைகள் கற

மருத்துவமனையில் நோயாளி மருத்துவர் பச்சை நிற உடை அணிவது ஏன் தெரியுமா

Image
மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் பச்சை நிற துணியை தொங்கவிட்டுள்ளார்களே? ஏன் தெரியுமா? அதுமட்டுமல்லாது மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போதும் பச்சை நிற உடையையே அணிகிறார்கள். அதே போல் நோயாளிகளுக்கும் அதே நிற ஆடை கொடுக்கப்படுகிறதே? ஏன் தெரியுமா? 1900களின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறமே பயன்படுத்தப்பட்டது. பின்னரே பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டது. திடீரென மருத்துவ துறையில் ஏன் இந்த மாற்றம் என தெரிந்துகொள்ள வேணுமா? அதற்கு முன் உங்களுக்கு ஒரு பரீட்சை! இந்த சிவப்பு நிறத்தை ஒரு நிமிடம் உற்று பாருங்கள் பின்னர் உடனே வெள்ளை நிறத்தை பாருங்கள். இப்போது அந்த வெள்ளை நிறத்தில் பச்சை நிறம் தெரிகிறதா? நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தொடர்ந்து சிவப்பு நிறத்தையே பார்த்து கொண்டிருக்கும் போது, மூளையில் உள்ள வண்ணத்தை வேறுபடுத்தி காட்டும் கூம்பு செல்கள் உணர்விழக்க நேரிடும். இறுதியில் சிவப்பு நிறத்தை அடையாளம் காண்பதே அரிதாகிவிடும். இதனால் தோலிற்கு இரத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தவறு செய்ய நேரிடலாம். இப்போது இவர்களை சுற்றி வெள்ளை நிறம் இருக்கும்

நாடு முழுவதும் சீன பொருட்கள் வலுக்கிறது ஒதுக்க முடியுமா ஒரு பார்வை

லடாக் எல்லையில், 'பறக்கும் நாகம்' சீனா வாலாட்டிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க மக்களிடம் 'வேண்டாம் சீன பொருட்கள்' என்ற கோஷம் வலுத்து வருகிறது. சமீபத்தில் கூட நாம் விநாயகர் சதுர்த்திக்கு சீன பிள்ளையார் தான் வாங்க வேண்டுமா? என்று கேட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், சீன பொருட்களை அடையாளம் காண தீவிரம் காட்டமாட்டோம் என்பது போல மத்திய அரசு தரப்பில் கருத்து கசிகிறது. சரி, இப்போது மக்களே இயக்கமாக துவங்கி விட்டனர். உள்ளூர் வியாபாரிகளும் கைகோர்த்து விட்டனர். நாம் சீன பொருட்களை புறக்கணித்து விட்டால் பெரும் வெற்றி தான். நடக்குமா? இதோ ஒரு பார்வை: மருந்து பொருட்கள் * மருந்து பொருட்கள், மாத்திரைகள், மருந்துகள் தயாரிக்கும் இந்திய கம்பெனிகளுக்கு மூலப்பொருட்களை தருவதே சீன நிறுவனங்கள்தான் . ஏன் தெரியுமா? இந்திய நிறுவனங்களில் தயாரிக்கும் மூலப்பொருட்களை விட 20 முதல் 30% வரை விலை குறைவு. விடுவார்களா இந்த விலை மூலமான லாபத்தை நம் நிறுவனங்கள். * சீனாவில் இருந்து மருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால், மருந்து ஆலைகளுக்கு ஆபத்து ஏற்படாது; லாபம் தான் குறையும். இந்திய நிறு

உங்கள் உண்மையான மொபைல் நம்பரை குறிப்பிடாமல் நீங்கள் யாரை வேணும்னாலும் அழைக்கலாம் வாங்க பார்க்கலாம்

தனியுரிமை காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. இதன் காரணமாக, அவர்கள் விரும்பாவிட்டாலும் மற்றொரு எண்ணைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு வழியைச் சொல்லப்போகிறோம், இதன் மூலம் உங்கள் எண்ணை வெளிப்படுத்தாமல் மற்றொரு நபரை அழைக்கவோ அல்லது செய்தி அனுப்பவோ முடியும். உங்கள் உண்மையான எண் யாரிடமும் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், முதலில் உங்கள் Android தொலைபேசியில் Text Me என்ற பயன்பாட்டை Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். உங்களிடம் ஒரு சிம் கார்டு அல்லது ஒரே சிம் கொண்ட தொலைபேசி இருந்தால், அதுவே உங்களுக்கு போதும். இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கிய பிறகு, அதில் உங்களுக்கு ஒரு விருப்பம் கிடைக்கும், அதில் நீங்கள் மற்றவருக்கு சொல்ல விரும்பும் எண்ணை உள்ளிடலாம். இதன் மூலம், உங்கள் உண்மையான எண்ணுக்கு பதிலாக நீங்கள் காட்ட விரும்பும் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும். அதே நேரத்தில், பதிவுசெய்த பிறகு, நீங்கள் அழைக்கும் நபரின் மொபைலில், வெவ்வேறு நாடுகளின் குறியீடு எண்ணுடன் நீங்கள் பதிவு செய்த எண் மட்டுமே தோன்றும். பதிவுசெய்த பிற

இனி சிறு வணிக நிறுவனங்கள் GPay மூலம் கடன் பெற முடியும் எப்படி தெரயுமா

வணிகங்கள்  'கூகுள் பே ஃபார் பிசினஸ்'  மூலம் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெற உதவும் வகையில் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூகுள் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மீண்டெழுந்து தங்களது வணிகங்களை மீண்டும் கட்டமைக்க உதவுவதற்காக கூகுள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையும் அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். “மூன்று மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் தற்போது டிஜிட்டல் மூலம் கட்டணங்கள் செலுத்தவும் பெறவும் கூகுள் பே ஃபார் பிசினஸ் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிதி நிறுவனங்கள் Google Pay for business ஆப் மூலம் வர்த்தகர்களுக்கு கடன் வழங்க உதவும் வகையில் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் பணியில் கூகுள் பே ஈடுபட்டுள்ளது. குறிப்பாக இன்றைய சூழலில் கூகுள் பே ஃபார் பிசினஸ் செயலி மூலம் பெறக்கூடிய இந்த ஏற்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. கூடிய விரைவில் இந்

ATM ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை 1க்கு பிறகு இந்த தளர்வு ரத்து

ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாமுழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க ஏ.டி.எம் கார்டு யூஸ் பண்றீங்களா ? அப்படினா இதை பாருங்க !! உங்களுக்கு தான் இது

ஏ.டி.எம் மையங்களில், மற்ற வங்கி ஏடிஎம் அட்டையை பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி கடந்து ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்த அறிக்கையை தற்போது ரிசர்வ் வங்கியிடம் அந்த குழு வழங்கியுள்ளது. அதில், மற்ற வங்கி ஏடிஎம் அட்டைகளை கொண்டு, அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் , கூடுதலாக பணம் எடுக்க, கட்டணம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம், ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் , 2 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கட்டணம் விவகாரம் குறித்த பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி இன்னும் ஏற்று கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த பரிந்துரை ஏற்றுகொள்ளப்படும் நிலையில், ஏடிஎம்மில் பிற கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்பது கூறிப்பிடத்தக்கது.

HOW TO CHECK SBI BANK BALANCE

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையினை எளிதாக்கும் வகையில் பல சேவைகளை அளித்து வருகிறது. அதிலும் தற்போது தனியார் வங்கிகள் கூட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யில் எப்படி உங்களது பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம். அதிலும் இண்டர்நெட்டினை பயன்படுத்தாமல் எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க இருகிறோம். எஸ்பிஐ சேமிப்பு கணக்கு அல்லது வேறு எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும், ஒரு மிஸ்ட் கால் மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம் எஸ்பிஐ-யின் balance inquiry number 09223766666 மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் mini statement மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். SBI Quick app எஸ்பிஐ-யின் SBI Quick app மூலமாக நாம் இணைய வங்கியினை பயன்படுத்தாமலேயே வங்கி இருப்பு தொகையினை தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையினை பயன்படுத்த எஸ்பிஐ-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள

கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்

Image
கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்   CACHE  TEMPERORY STORAGE ஆக பயன்படும் . கணினியில் HARD DISK   ஃபைல்களை வேகமாக பரிமாறிக்கொள்வதுக்கு இந்த MEMORY   பயன்படுகிறது . WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம் . ஒரு ஃபைல்ளை HARD   டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PAST செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு அதன்பின்னர் முதல்நினைவகத்தில் ( RAM) பதிவு செய்யப்படுகிறது . ம ீண்டும் அதே ஃபைல்ளை காப்பி செய்தோமானல் கணினி முதலில் CACHE MEMORY   பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்பட்டுகிறது . அல்லவா ! ஆனால் கடைசியாக COPY   செய்த ஃபைல் RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . மீண்டும் ஒரு முறை கணினி CACHE   மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும் . இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை CACHE MEMORY பரிமாறும் நேரத்தை குறைக்கலாம் . இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256 எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம் . விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்ய