Posts

Showing posts from 2020

saudi arabia new Rules

Image
சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் 14மார்ச்2021 முதல் நீக்கம்  இவை  மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது. [The Ministry of Human Resources and Social Development (MHRSD) Labor Reform Initiative (LRI)]  ♦️ அனைத்து  தொழிலாளர்களுக்கும் காலம் குறிப்பிடப்பட்ட டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும். ♦️ சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] தாயகம் செல்லலாம். ♦️ எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம். ♦️ ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும். இவை அனைத்தும் "ABSHER & QIWA" online மூலம் எளிதாக  செயல்படுத்தவும் முடிவு.

Are you buy TNEB bill online? நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் பில் ஆன்லைனில் செலுத்துகிறீர்களா ?

Image
  நீங்கள் என்ன ஆன்லைனில் ஈப பில் செலுத்துகிறீர்கள் தற்பொழுது இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த வலைத்தளம் அக்டோபர் 27 தேதியுடன் முடக்கப்படுகிறது அக்டோபர் 28 முதல் மாற்றம் செய்து புதிய வலைத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம் பழைய இணையதளம் 👇👇👇 www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in  வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  புதிய இணையதளம்  👇👇👇👇👇 www.tangedco.org,  www.tantransco.org,  www.tnebltd.org  பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம்.

How to apply pvc athaar card plastic ஆதார் கார்டு எப்படி பதிவு செய்து வாங்குவது

Image
எப்படி வாங்குவது? * உதய் இணையதளத்தில் 'மை ஆதார்' பிரிவில் சென்றால் 'ஆர்டர் ஆதார் பிவிசி' என்ற புதிய இணைப்பு தரப்பட்டுள்ளது. * அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிட வேண்டும். * ஒருவேளை உங்கள் மொபைல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் நம்பரை தர வேண்டும். * பின்னர், 'சென்ட் ஓடிபி'யை கிளிக் செய்ய ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கப்பெறும். அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டையின் நிலை குறித்து ஆன்லைனில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Saudi arabia international flight open news சவூதி அரேபியா ஃப்ளைட் ஓபன் நியூஸ்

Image
  15/09/2020 இன்று முதல்  *சவூதி அரேபியாவில் ஜனவரி 1 2020 முதல் கொரோனா எதிரொலியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும்  தளர்வு* *_நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்குகள் செப்.15 முதல் அமல்_*    👉  கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச்.15 முதல் அமலில் இருந்த கட்டுப்பாடுகளான  சவுதியில் இருந்து வெளியேறுதல், திரும்பி வருதல் உட்பட கடல், நிலம், விமான வழியான அனைத்து விதமான போக்குவரத்து தடைகளும் வருகின்ற   1ஜனவரி2020 முதல்  வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முற்றிலும் தளர்வு செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக செப். 13 அன்று சவுதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   👉  வளைகுடா நாடுகள் (GCC)ல் உள்ள சவுதி நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரிடம்   செல்லுபடியாகும் விசா இருப்பின் அவர்கள் *செப்.15* முதல் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.    👉 செல்லுபடியான  எக்சிட் ரீ-என்ட்ரி (exit re-entry) விசா, வேலை அனுமதி விசா (work visa) இகாமா மற்றும் விசிட் விசா முதலியனவற்றில் ஏதேனும் ஒன்றை  வைத்திருக்கும்  வெளிந

IQAMA இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

Image
  வணக்கம்  இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்   இக்காமா என்றால் என்ன?  சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் வேலை செய்து இருக்க கூடியவர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு வழங்கப்படக் கூடிய விசா மற்றும் குடியிருப்பு அனுமதி ஆகும்     இக்காமாவின் செல்லுபடியாகும் காலங்கள் எவ்வளவு?  பொதுவாக இக்காமா வழங்கப்படும் காலம் ஒன்று அல்லது இரண்டு வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் உங்களுடைய    தற்பொழுது இக்காமா  அட்டை 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்  வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது இக்காமாவின்   காலாவதி  எவ்வாறு தெரிந்து கொள்வது? அப்சர் கணக்கு உங்களிடம் இருந்தால் அதன் மூலமாகவும் அல்லது தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் காலாவதியான இக்காமாவின் புதுப்பிக்கும் நடைமுறைகள்? நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது  கபீல்களின்  கீழ் வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தால் அவர்களே உங்களின்  இக்காமா ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஆன்லைனில் புதுப்பித்துக் தருவார்கள்   காலாவதியான   இக்காமா விற்கு விதிக்கப்

check iqama color satus saudi உங்கள் நிறுவனத்தின் கலர் நிதாதத்தை சரிபார்க்க

Image
உங்களுடைய கபீல்   அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் நிலையை சரிபார்க்க  MOL  வலைதளத்தில் மூலம் சரி பார்க்கலாம் நீதாதத்  வண்ணம் நிலையை சரிபார்க்க நீங்கள் ஏதாவது ஒரு கபீல் அல்லது நிறுவனத்தின் இக்காமா உடன் பணிபுரிந்து இருக்க  இக்காமா எண்ணை நீங்கள் வைத்திருக்க வேண்டும் உங்களுடைய கபீல்  அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் சிவப்பு -மஞ்சள்- பச்சை- பிளாட்டினம் ஆகியவற்றை சரிபார்க்க முதலில் MOL  வலைதளத்தை திறந்தவுடன் பின்வரும் மூன்று விவரங்களில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஓபன் செய்யவும் https://www.mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx அதில்  பார்டர் நம்பர் இக்காமா நம்பர்  பாஸ்போர்ட் நம்பர் இதில் ஏதாவது ஒரு நம்பரை பதிவு செய்ய வேண்டும் அடுத்து படத்தில் உள்ளவாறு  நான்காவதாக இருக்கக்கூடிய பட்டனை அழுத்தும் போது எல்லா நாட்டு பெயர்களும் இடம் பெற்றிருக்கும் அதில் உங்களுடைய நாட்டை கிளிக் செய்யவும் அடுத்ததாக வெரிஃபிகேஷன் என்று சொல்லக்கூடிய சரிபார்க்கும் என்னை போடவும் அதாவது கேப்ட்சா என்டர் செய்யவும் படத்தி

IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது

Image
IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது: 1. முதலில் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும். 2. அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, பேமெண்ட் ஆப்சனுக்கு வரவேண்டும். 3. அதில் 'பே ஆன் டெலிவரி' அல்லது 'பே லேட்டர்' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இது 'இபே' என்பதில் இருக்கும். IRCTC இணையதளத்தில் லாகின் செய்தவுடன் உங்கள் பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் அதன் பின் நீங்கள் பயணம் செய்யும் ஊருக்கு எத்தனை ரயில்கள் உள்ளது என பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் செளகரித்திற்கு ஏற்ற ரயிலை தேர்வு செய்து பயணிகள் விபரத்துடன் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். அதன் பின்னர் 'கேப்ட்சாவை' எண்டர் செய்து பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்கு வரவேண்டும். அதில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வாலட், பே ஆன் டெலிவரி என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் பே ஆன் டெலிவரியை தேர்வு செய்து பின்னர் அதற்கு கீழ் உள்ள பட்டனை க்ளிக் செய்ய

Patta பட்டா மகிழ்ச்சியான செய்தி இதை படியுங்கள்

Image
மகிழ்ச்சியான செய்தி ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் , பத்திரபதிவு செய்பவர்களுக்கு பட்டா தானாகவே மாறிவிடும்! தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. நிலம் அல்லது வீட்டை வாங்கியவர்கள் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு இனிமேல் கவலை இல்லை அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் ஆய்ந்து பட்டா வழங்குவார். தற்போது புழக்கத்தில் இருந்த இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் படி சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம்

Saudi Arabia New Iqama fees சவூதி அரேபியா புதிய இக்காம கட்டணம்

சவூதி அரேபியாவின் இகாமா புதுப்பித்தல் கட்டணம் 2020 முதல்வெளிநாட்டினர், சார்புடையவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு  உங்கள் நிறுவனத்தில் 50% க்கும் அதிகமான சவுதி நாட்டினர் இருந்தால், 2020 ஆம் ஆண்டிற்கான உங்கள் இகாமா புதுப்பித்தல் கட்டணம் கீழ்வருமாறு            👇  மொத்த இகாமா கட்டணம்: 9550 SAR (12 மாதம்) 8400+650+500  இகாமா கட்டணம் (MOI): 650 SAR  பணி அனுமதி (மக்தாப் அமல்):  8400 SAR அல்லது மாதம்  700 SAR  மருத்துவ காப்பீடு: 500 SAR (காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடலாம்   உங்கள் நிறுவனத்தில் 50% க்கும் குறைவான சவுதி நாட்டினர் இருந்தால், 2020 ஆம் ஆண்டிற்கான உங்கள் இகாமா புதுப்பித்தல் கட்டணம்  மொத்த இகாமா கட்டணம்: 10750 SAR (12 மாதம்) 9600+650+500  இகாமா கட்டணம் (MOI): 650 SAR  பணி அனுமதி (மக்தாப் அமல்): வருடத்திற்கு  9600 SAR அல்லது மாதம் 800 SAR  மருத்துவ காப்பீடு: 500 SAR (வேறுபடலாம்)   வீட்டுத் தொழிலாளர்கள் இகாமா கட்டணம் (ஹவுஸ்மேட், ஹவுஸ் டிரைவர் (சைக் காஸ்), கடேனர், விவசாயிகள் (மஸ்ரா) உட்பட)  மொத்த இகாமா கட்டணம்: 1100 SAR (12 மாதம்) 600+500  இகாம

கொரோனா மாதிரி உலகை மிரட்டிய கிருமிகளின் தொகுப்பு இதை படியுங்கள் உங்களுக்கே புரியும்

இன்றைக்கு கொரோனா போல, மனித குலத்தை பல நூற்றாண்டுகளாக பல்வேறு தொற்றுநோய்கள் அவ்வப்போது வந்து மிரட்டிக் கொண்டு தான் இருந்திருக்கின்றன. தடுப்பூசிகளும், மருந்துகளும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பல தொற்றுநோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்... ஒரு சில நோய்கள் மட்டும் முழுவதுமாக குணப்படுத்த முடியாதவையாக, மருத்துவ அறிவியலுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கட்டுக்குள் கொண்டு வரமுடியாத தொற்றுகள் குறித்த பார்வை... சாதித்தவை: * பன்றிக்காய்ச்சல் மருந்து: 2009ம் ஆண்டு ஏப்ரலில் கண்டறியப்பட்டதில் இருந்து 5 மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. வீரியத்திறன்: 60 முதல் 70% வரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது இந்த மருந்து. சவால்கள்: நீண்டகால நோய் எதிர்ப்பு திறனற்றதாகவே உள்ளது. * எபோலா வைரஸ் மருந்து: 2014ல் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுக்கு பிறகே தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. வீரியத்திறன்: 95% முதல் 100% குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த மருந்து. சவால்கள்: வளரும் நாடுகளிடையே கொண்டு சேர்ப்பது. * இன்ப்ளூயன்

தமிழக அரசு வேலை 10 மற்றும் 12 ஆம் தகுதி முந்துங்கள் கடைசி தேதி மிக விரைவில்

Image
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கடைசி தேதி, காலி பணியிட விவரங்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர்,, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் மொத்தம் 2232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது பணியிடங்கள் நியாயவிலைக்கடை விற்பனையாளர் நியாயவிலைக்கடை கட்டுநர் பணியிடங்கள்: 2232 (தமிழகம் முழுவதும்) கல்வி தகுதி வயது வரம்பு நியாயவிலைக்கடை விற்பனையாளர

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் உபயோக படுத்துவது எப்படி how to use 2 WhatsApp 1 mobile

Image
இந்த அம்சத்தைப் பயன்படுத்த தங்களது  ஸ்மார்ட்போன்களில் டூயல் ஆப்ஸ், குளோன் ஆப் அல்லது டூயல் மோட் என்ற அம்சம் கைபேசி settings இருக்கும். இந்த அம்சம் இல்லாத போன்களில் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் குளோன் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, இதன் மூலம் தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை தொடங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஸ்டெப் 1:   பிளே ஸ்டோர் மூலம் வாட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் ஸ்டெப் 2:  இதற்குமுன்னதாக உங்கள் போனில் வாட்ஸ் ஆப் இருந்தால் ஸ்டப் 1 கிளிக் செய்வதை skip செய்யவும். ஸ்டெப் 3: டூயல் அப்/ குளோன் அப் /  டூயல் மோட்/ அப் ட்வின் இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று பிறகு அதன் மீது கிளிக் செய்யவும் ஸ்டெப் 4: இங்கு வாட்ஸ்அப் ஆப்ஷனை கிளிக் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.  ஸ்டெப் 5: இப்பொழுது இரண்டாம் நிலை வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்லாம். ஸ்டெப் 6:  உங்களது 2வது  வாட்ஸ் ஆப் நம்பரை கொடுத்து ஆக்டிவிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்னர் ஃபைல்ஸ் மற்றும் காண்டாக்ட்ஸ்களை வாட்ஸ் அப்புக்குள் அக்சஸ் செய

PM kisan samman Nithi அடுத்த தவணை எப்பொழுது எவ்வாறு சரிபார்ப்பது

PM-Kisan Samman Nidhi:  பிரதமர் கிசான் சம்மன் நிதி (PM Kisan Nidhi) திட்டத்தின் அடுத்த தவணை 2000 ரூபாய் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும். இதற்காக நாட்டின் சுமார் 8,52,98,409 விவசாயிகள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் பதிவுகளையும் சரிபார்க்க வேண்டும். உங்களிடம் ஆதார் எண், கணக்கு எண் அல்லது வங்கி கணக்கு எண் இருந்தால், உங்களுக்கு தவணை கிடைப்பதை சரிபார்க்கலாம். டெபாசிட் செய்யப்பட்ட அல்லது பதிவேற்றப்பட்ட (pm kisan registration) இந்த ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அவற்றை சரிசெய்யவும், இதனால் இந்த ஆண்டின் இரண்டாவது தவணை எளிதாக உங்கள் கணக்கில் வரும். மொத்தம் 6000 ரூபாயில் ரூ. 2000 முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வங்கியில் சேர்க்கப்பட்டது. இரண்டாவது தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறு விவசாயிகளுக்கு மூன்று தவணை

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்

Image
ஜோக்கர் என்ற கணினி வைரஸைப் புகுத்தி வந்த 11 செயலிகளை தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சில செயலிகளின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். அவற்றில் 11 செயலிகள், 'ஜோக்கர் மால்வேர்' என்ற கணினி வைரஸால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் ப்ளே ஸ்டோர் உருவாக்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு சுவர்களையும் மீறி அந்த செயலிகள் தாக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இந்த வைரஸ் மூலம், அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் முக்கிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாமலேயே ஹேக்கர்களால் திருட முடியும். இதையடுத்து, கீழ்க்கண்ட அந்த 11 செயலிகளையும் கூகுள் நிறுவனம் தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. com.imagecompress.android com.contact.withme.texts com.hmvoice.friendsms com.relax.relaxation.androidsms com.cheery.message.sendsms (two different instances) com.peason.lovinglovemessage com.file.reco

மொபைல் பயன்படுத்தும் பலர் இந்த 10 Trick use பன்னியிருக்க வாய்ப்பில்லை

ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப்பாக மாற்றலாம் இது நம் பலரின் யோசனைக்குள் உதித்த ஒரு எளிய தந்திரம், கூடவே சிறு பயனுள்ள ஒரு தந்திரமும் ஆகும். வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவின் முன் ஒரு லென்ஸை வைக்க அது தொலைதூர பார்வையை கொடுக்கும். இது மற்ற பக்கத்தில் ஒரு விரிவான புகைப்படத்தைப் பதிவு செய்யவும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் கேமராவை மைக்ரோஸ்க்கோப்பாக மாற்றலாம் ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப் ஆக மாற்றுவதை போன்றே இதுவும் மிகவும் சுலபம் தான். உங்கள் தொலைபேசியின் கேமராவில் சிறிய லென்ஸை இணைத்தால் போதும். உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு கையடக்க, டிஜிட்டல் நுண்ணோக்கியாக மாறிவிடும். இந்த அற்புதமான ஹேக் ஆனது மைக்ரோ கண்களின் வழியாக இந்த உலகை ஆராய்ந்து, அழகான புகைப்படங்களை எடுக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வெப்ப கேமராவாக பயன்படுத்தப்படலாம் இராணுவம் மற்றும் பிற வல்லுநர்களுகாக கண்டுபிடிக்கப்பட்ட சீக தெர்மல் தொழில்நுட்பமானது தற்போது அனைவர்க்கும் கிடைக்கிறது. இது உங்கள் தொலைபேசியுடன் இணைக்கபடக்கூடிய இந்த சிறிய கேமரா ஆனது, உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றைய

True caller ல் உங்கள் மொபைல் நம்பரை அன்லிஸ்ட் செய்ய

ட்ரூகாலர் ஆப் வசதியில் ஏற்கனவே தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஆப் வசதி அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களை கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு உள்பயன்பாடாக உள்ளது. அதாவது இந்த ட்ரூகாலர் ஆப் வசதி பயனர்கள் வழங்கிய சரியான அனுமதிகளுடன் அறியப்பாடத அழைப்பாளரிடமிருந்து உள்வரும் அழைப்புகளை தானாகவே ஸ்கேன் செய்து வைத்து, அழைப்பை எடுப்பதற்கு முன்பே அதைப்பறிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்களை பற்றிய தகவல் சேகரிப்பை நிகழ்த்த ட்ரூகாலர் ஆப் ஆனது பயனர்களின் போன் காண்டாக்ட்களை நம்பியுள்ளது. அதாவது இந்த ஆப் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, உங்களின்எண்களை பற்றிய தொடர்பு விவரங்கள் ட்ரூகாலரில் கிடைக்கின்றன,ஏனெனில் இந்த ஆப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் எவரோ ஒருவர் உங்கள் மொபைல் எண்ணை அவரது போனில் சேமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ட்ரூகாலர் ஆப் வசதி ஆனது அதன் தரவுத்தளத்திலிருந்து உங்களின் மொபைல் எண்ணை அன்லிஸ்ட் (பட்டியலிடப்படுவதை நீக்குவதற்கான) வசதியை வழங

ICSE BOARD 10 th and 12 th RESULT எப்படி பார்ப்பது?

ICSE Board result 2020:  10 ஆம் வகுப்பு (CISCE) மற்றும் 12 ஆம் (ICSE) வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 10, 2020) வெளியிடப்படும் என இந்திய பள்ளி கல்வி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (ICSE Board) அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிஎஸ்இ வாரியம் cisce.org இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் முடிவின் அறிவிப்பு குறித்து முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வாரியம் (Indian School Certificate Examination) 10 மற்றும் 12 ஆம் தேதிகளின் முடிவுகளை ஜூலை 10 ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடும். பள்ளி கவுன்சில் போர்ட்டலுக்குச் சென்று உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் முடிவை தெரிந்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில், மாணவர்கள் நேரடியாக ஐசிஎஸ்இ வலைத்தளத்திற்குச் சென்று அவர்களின் தேர்வு  முடிவுகளை சரிபார்க்க முடியும். இது தவிர, எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை சரிபார்க்க முடியும். 2020 ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகளை கீழே உள்ள வலைதளத்தில் காணலாம்: cisce.org results.cisce.org முடிவை எப்படிப் பார்ப்பது? இணையதளத்தில் நுழைந்து முடிவுக

படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தோல்வி, தோச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 30.06.2020 அன்றைய நிலையில், ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓா் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரா்கள் 30.09.2020 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித் தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் விண்ணப்

திருமாங்கல்யமான தாலி மஞ்சள் கயிறு இடுவதற்கு காரணம் என்ன?

Image
  மார்பக புற்று நோய் என்பது பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கே பெரும்பாலும் வருகிறது திருமாங்கல்யம் ஆன மஞ்சள் கயிற்றில்  மஞ்சள் என்கிற கிருமிநாசினியான மருத்துவ குணங்கள் இருப்பதால் மஞ்சள் கயிறு மார்பகதோடு எப்பொழுதும் உரசுவதால் பெரும்பாலும் தடுக்கப்படுகிறது இதனால்தான் பழங்காலத்து பெண்கள் குளிக்கும் போது மாங்கல்யதில் மஞ்சள் இட்டு குளிக்கிறார்கள் மார்பக புற்றுநோய் சமீபகாலமாக தான் பெரும்பாலும் பார்க்கிறோம் இதற்கு போதிய விழிப்புணர்வு and தாய் தன் பிள்ளையிடம் சொல்லி வளர்க்காததுதான் காரணம் இக்கால பெண்கள் கொஞ்சம் விழிப்புடன் இருந்தாலே போதும் 

2020 12ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வாய்ப்பு

மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் அறிக்கை - 8.7.2020 தமிழ்நாட்டில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020இல் நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 அன்று நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் பொதுத் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, 24.3.2020 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, இத்தேர்வினை 27.7.2020 அன்று நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது மாணவர்கள் அவர்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இத்தேர்விற்கான புதிய நுழைவு சீட்டுகளை மாணவர்கள் தாங்களே www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து 13.7.2020 முதல் 17.7.2020 வரை பெற்றுக்கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டுக

Jio அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்

Image
  சலுகைகளை வழங்க சலுகைகளை வழங்க விரைவில் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஜூலை 2020 ஜியோவில் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம். ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ நிறுவனத்தின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம், எனவே இந்த திட்டத்ததை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்தால் பயனுள்ள வகையில் இருக்கும். ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்

WhatsApp new update

Image
உலகின் பிரபலமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் கடந்த வாரம் சில புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. KaiOS போன்ற இயக்க முறைமைகளைக் கொண்ட போன்களுக்கான அனிமேஷன் ஸ்டிக்கர்கள், வாட்ஸ்அப் வெப் மற்றும் ஸ்டேட்டஸ் அம்சங்களுக்காக டார்க் மோடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பொது பயனர்களுக்கான QR கோடின் ஆதரவு விரைவில் வருகிறது. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வாட்ஸ்அப்பில் எண்ணைச் சேமிக்கும் வழி முற்றிலும் மாறும். நிறுவனம் பல மாதங்களாக இந்த அம்சத்தை சோதித்து வருகிறது. சில வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் கடந்த ஆண்டு மட்டுமே கிடைத்தது. இப்போது இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும். இதற்குப் பிறகு, அனைத்து பயனர்களுக்கும் அவற்றின் தனித்துவமான QR கோட் இருக்கும், மற்ற பயனர்கள் தங்கள் போனில் எண்ணை ஸ்கேன் செய்து சேமிக்க முடியும். எனவே இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை அறிவோம். இது போல வேலை செய்யும் QR கோட். வாட்ஸ்அப் பயனர்களின் சுயவிவரத்திற்கு( Profile ) அடுத்ததாக ஒரு QR கோட் தோன்றும். இந்த கோடை காண, பயனர்கள் பயன்பாட்டின் சேட்டிங்க்ளுக்கு செல்ல வேண்டும், அங்க